பாடல் 696 -திருமயிலை
நிறைதரு மணியணி - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாடல்.
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை - சதகோடி
பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள் - தரு கோவே
பாடல் 756 - திருக்கூடலையாற்றூர்
வாட்டியெனைச் சூழ்ந்தவினை - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.
வேற்றுருவிர் போந்துமது ராபுரியி லாடிவகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மெட்டைஎரித் தாண்டசிவ லோகன்விடை ஏறியிட - முங்கோளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமேனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் - கந்தவேளே
பாடல் 759 - யாழ்ப்பானாயன்பட்டினம்
பூத்தார் சூடுங் - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டானந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி - புவநேசை
ஆக்கா யாவும் பற்றியே திரிபுர
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கத் துறைபவள் - பெறுசெயே
பாடல் 761 - ஸ்ரீமுஷ்டம்
சரம்வெற் றிகைய - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம்.
போருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரிபட் டுச்ச்ரு காய்விழ வேநகை
புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட - மொருமாது
புகழ்சத் திச்சிலி காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
புவனத் தைப்பரி வாய்முத லீனுமை - யருள்பாலா
Comments
Post a Comment